Skip Navigation Links


நின்ற(றாலும்) மழையில் நனைபவன்

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 13-06-2013 18:16:00

'கொட்டும் மழை.எல்லோரும் ஒதுங்கி நிற்கநான் மட்டும் இறங்கி நடந்தேன்…எல்லோரும் என்னைகிறுக்கனாய் பார்த்தார்கள்அடுத்த நாள்அந்த மழை இல்லை. வெயில்.ஒதுங்க யாருக்கும் நேரம் இல்லைஓடும் கால்களுக்குபொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ?ஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்குஇன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்o.o.o.அந்த மழையில்இதற்கு முன் வந்தஅந்த மழையை போலவேஅவர்களுக்குசூடாய் தேநீர் தேவைகாதோரம் இன்னிசை தேவைகதகதப்பாய் காதல் முத்தம் தேவைஉயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவைஇதை எல்லாம் தருகிற மழை(...)'

Read full article

என்னை மன்னிப்பாயா?

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 28-05-2013 17:05:00

'மன்மத கணைபூ கணை என்று நினைத்துதான்உன் மீது எய்தேன்… கணை உன் இருதயம் காயபடுத்தும்,தெரியாமல் இருந்துவிட்டேன்.என்னை மன்னிப்பாயா? 0 தேன்கூடாகத்தான்நம் காதலைஇதயத்தில் கட்டினேன்… என் இம்சை தேனீ.கொட்டும் என்பதை மறந்துவிட்டேன்.என்னை மன்னிப்பாயா? 0 ரோஜாக்கள் என்றெண்ணி தான்என் கவிதையைஉன் பாதையில் கொட்டினேன். என் பேனா முட்கள்.குத்தும் என்பதை மறந்துவிட்டேன்.என்னை மன்னிப்பாயா? 0 நீ ரசிக்க, ரசித்து சிரிக்ககாத்தாடியாக உன் வானத்தில்பறந்து வந்தேன்… மாஞ்சா கயிறு கழுத்தறுக்குமென்றுநினைக்கவில்லை.என்னை (...)'

Read full article

ஈரமில்லாத மழை – 3

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 28-05-2013 16:55:00

'இடி மட்டும்விழுந்து கொண்டே இருந்தது மழை வரவும் இல்லை…இடி தாக்கிய மரம் மீண்டும் தளிர்க்கவும் இல்லை o + o + o ஓங்கி பெய்த மழை ஓய்ந்ததும்எல்லோரும் நகரத் துவங்கினர்… அவர்கள்  விட்ட குடைஅவர்கள் நினைவிற்கு வரவே இல்லை… அடுத்த மழை வரும் வரை o + o + o வானவில்லும் வேண்டுமென்கிறாய்.மழையையும் பிடிக்காதென்கிறாய்! o + o + oஎந்த மேகம் மழை மேகமென்றுஅந்த மயிலுக்கு மட்டும் தெரிகிறது.. என்னை சரியாய்மொழிபெயர்த்துவிடுகிற அவளை போல… பல நேரங்களில்தோகை விரித்த மயில்ஏமாந்து போகிறது… ஏமாற்றப்படுகிறது. அந(...)'

Read full article

எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 22-05-2013 16:27:00

'இன்னும் 20 வருடத்தில்எதுவேண்டுமானாலும் நடக்கலாம்எந்தவேறொரு இனமும்இல்லாது போய்விடுமெனில்இனி தேசிய விலங்கு மனிதன்தேசிய பறவை மனிதன்தேசிய மரம் மனிதன் என்று அறிவிக்கப்படலாம்எந்தவொரு இடமும் இல்லாது போய்விடுமெனில்  காலை தொலைக்காட்சியில்சென்னைக்கு மிக அருகே வெள்ளி கிரகத்தில்2 சதுர அடி வெறும் 25 கோடிநடிகைகள் விளம்பரம் செய்யலாம்…எந்தவொரு உணவும்இல்லாது போய்விடுமெனில்மனிதன் மனிதனையேஅ(பி)டித்து தின்ன துவங்கலாம்போகும் கண்டமெல்லாம் குப்பை பார்க்கும் திசையெங்கும் பாலிதீன் புழுதிசுவாசிக்கும் கா(...)'

Read full article

அடடே ஆச்சரியக் குறி – 5

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 21-05-2013 17:25:00

'நீ, சயனைடு நதிநான் உன்னில் வாழப்பழகிய மீன்.நம் காதல் மரணம் வெல்லும்.நீ, வற்றா நதிநான், தீரா தாகம்.நம் முத்தம் முற்றாமல் நீளும்நீ,  நிஜம்நான் கனா.நான் நீயாகிறேன். காதல் நாமாகும்.நீ, இனி நான்.நான் எப்போதோ நீ.இன்னும் இதழ்கள் நான்கு எதற்கு?சில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றனசில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்நாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4'

Read full article

தண்டசோறு

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 18-05-2013 19:23:00

'என்னை தண்ட சோறுஎன்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?யாரோ குடித்துவிட்டு போட்டு போனபாட்டில்களுக்கு நான் கர்தாவாகாமல் காரணம் மட்டுமானது“கீழ் வீட்டு பெண்ணை காணவில்லையாம்” என்றதும்அவனாகத் தான் இருக்கும் … என்று என் பெயர் அடிபட்டது“வேலைக்கு போகலாம்ல, காசோட அருமை தெரியுதா” என்றவர்க்குதெரிந்ததால்தான் ஆறு ரூபாய் டிக்கெட் மிச்சமாக்க10 கிலோமீட்டர் நடந்ததுஎன்னை தண்ட சோறுஎன்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?.நான் பக்கத்து வீட்டு குழந்தைக்குசோறு ஊட்டுகையில் பூச்சாண்டியாக பயன்பட்டது…என்னை(...)'

Read full article

ஈரமில்லாத மழை – 2

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 18-05-2013 19:20:00

'அவளுக்கு சேராது என்று தெரிந்தபின்அந்த மழை பொழியவே இல்லை…என்றாவது பெய்யும் மழையால்அவள் காய்ச்சல் கொண்டால் கூடஅந்த மழைக்கு பின்னான வானவில்சாயம் இல்லாமல் தான் இருந்தது…# o # o #சாரல் துளியின் கணம் தாளாமல்உதிரும் என்று தெரிந்தும்அந்த மலர் மழை ரசித்து கொண்டிருந்ததுஉதிர்வதின் வலி சுகம் என்பதுமலர் தவிர்த்து யாருக்கு புரியும்…# o # o #போன முறைஅவன் ரசித்துகொண்டிருக்கையில்சட்டென்று நின்ற மழைஇந்த முறை மீண்டும் வந்திருந்ததுஆனால் ரசிக்க அவன் இல்லை அங்கேஅவன் இருக்க போவதில்லை எங்கயும்…# o # o #நிம(...)'

Read full article

முடியா முடிச்சு

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 18-05-2013 19:12:00

'தாகம் எடுத்தவன் கண்ணில்தடாகம் சிக்குகிறது…யாரையும் நெருங்க விடாமல்தடாகம் சுற்றி வேலி போட்டுகொண்டுஇறங்கி குடிக்கத்தொடங்குகிறான்…தடாகம் தீர்கிறது…தடாகங்கள் தீர்கிறது…தாகம் மட்டும் தீர்ந்ததாய் தெரியவே இல்லை…+ o + o +சட்டென்று அடைத்து உட்புறம் தாழிடப்படும் கதவுகள் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றோ உள்ளே நுழைய அனுமதி இல்லாதவர் எவரோ நுழைந்துவிட்டனர் என்றோ சொல்லிவிட்டு சட்டென்று மூடிக் கொள்கிறது + o + o +தன் கனிகள் அடிக்கடி திருடுபோவதாய்கனிமரம் ஒன்று அழுது கொண்டிருந்தது…அதன் கண்ணீர் (...)'

Read full article

சர்க்கரை வலி

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 04-05-2013 02:20:00

'பால் குடிக்கும் பிள்ளைமார் கடிக்கும் தாயின்பம் உறங்கிய தந்தை முதுகில்குதித்தாடும் பிள்ளை பாதம் தந்தை முத்தம் நடுவேகுறும்பு செய்யும் மீசை கொட்டும் மழை நடுவேசுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை  மறந்து போன கனவை மீண்டும் பார்த்துவிடும் ஆசை கட்டெறும்பு முத்தமிட்ட கண் இமைசொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை… காதலித்ததுண்டா?காதல் வலி கொண்டதுண்டா?எல்லோரும் ரசிக்கின்ற வலிகாதல்…நானும்…'

Read full article

க்ஆ-த்அ-ல் – 4

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 25-04-2013 08:01:00

'இரட்டைக் குழந்தைகள்.காலம் காதல் அவர்கள் பெயர்.சுவரில் காதல் ஒரு ஓவியம் வரையும்காலம் திடீரென்றுஅடித்து, அழித்து, காதலை அழவைத்துவிட்டுதான் விரும்பிய ஓவியம் வரையும்…ஓவியம் விரியும்…காதல் கரையும்அந்த சுவர் என் வாழ்க்கை…அவர்கள் இருவரும் ஒரு மிட்டாய்கென சண்டைபோட்டு, அமைதியாகி சேர்ந்துவிடுகிறார்கள் நிமிடத்தில்…மிட்டாய் மட்டும் மண்ணில்.அந்த மிட்டாய் என் இரவு…குழந்தை கடித்தால் அம்மாவிற்கு வலிக்குமா?வலிக்காது என்பது பொய்…வலிப்பதை வெளியில் சொல்வதில்லை…இரண்டு குழந்தையின்கடியை ரசிக்கும் தாய் என்(...)'

Read full article

முடிந்த இரவு விடியாத பகல்

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 20-04-2013 05:51:00

'அழுத பிள்ளை உணவு உண்ணவெனவானம் வந்த நிலா…இன்னும் விழித்து கிடக்கிறதுபிள்ளை உறங்கும் அழகை ரசித்தபடி…ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு முத்தமெனஎண்ண தொடங்கிய காதலர்கள்எண்ணுவதை மட்டும் விட்டுவிடபரிமாறிக்கொண்ட முத்தங்கள் நட்சத்திரமாய்“தூங்கிட்டியா செல்லம்” அவள் விரல் மடலில்உறங்கவே தொடங்காத அவன் இரவுஇரண்டு மணிக்கெல்லாம் விடிந்து விடுகிறது…எல்லோருக்குமான  இரவு நகர்ந்து கொண்டிருக்கஇவனுக்குமட்டும்மேனோதூண்டில் முள் முழுங்கிய மீனின் ரணமாய் இரவு முடியவும் இல்லை  பகல் விடியவும் இல்லைஇரவு பண(...)'

Read full article

கடவுளின் கண்ணீர்

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 20-04-2013 05:47:00

'முன்குறிப்பு -எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல கடவுள்களே நீங்கள் என் நண்பர்கள் என்கிற உரிமையில் வம்பிழுத்துவிட்டேன். மன்னிக்கவும்.இங்கே என் கடவுள்களை பற்றி நான் பேசி உள்ளேன். யாரவது வந்து ஏன் என் கடவுளை பற்றி பேசினாய் என்று கேட்டால்என்னிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.யாரைபற்றியும் கவலைபடா(ட நேரமில்லா)தமாநிலத் தலைநகரின் மூலையில்ஒரு ஆண்கள் தங்கும் அறை அது…மூலையில் சிலுவை மரம்தரையில் தங்க சங்கு சக்கரம் அடகு ரசிதுதூசி படிந்த ஹம்சதூளிகா மஞ்சம்* நான்குமூன்று மாத கடன் ப(...)'

Read full article

முடிவிலியின் தாகம்

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 20-04-2013 05:33:00

'கொன்று கொய்து கொண்டையில் கொண்டிடும் கைக்கு மத்தியில் கண்டு ரசித்திடும் இதயம் இருந்தும் அந்த ரோஜா கிள்ளி கொய்யும் கைக்கே சொந்தமாம் . o.o.o . கண்ணாடி தன் முன்னின்றவன் பிம்பம் கொள்கிறது… பிம்பத்தின் சொந்தகாரனுக்கு பிடிக்காமல் கல்லெடுத்து அடிக்கிறான்…உடைந்த கண்ணாடியோ இரண்டு பிம்பம் கொண்டு நகைக்கிறது சில்லு சில்லாய் நொறுங்கியும் கண்ணாடி தான் களவாடிய பிம்பம் தரவே இல்லை தோற்று போய் நகருகிறான்… கண்ணாடியும் தோற்று போகிறது சில சமயம் இருவரின் தோல்வி தான் பெரும் தீர்வாகும் … தீர்ப்பாகும் . (...)'

Read full article

க்ஆ-த்அ-ல் – 3

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 07-04-2013 02:16:00

' யாரென்கிறாய்???…நீ தான் என சொல்லிவிட முயல்கிறேன்நெடிலுக்கு  மாத்திரை இரண்டாம்…“நீ” என்பதின் மாத்திரை கோடியானது தெரியுமா? o.o.o நீ முறைப்பதை மொழிபெயர்த்தால் கூடகாதல் கிடைக்கிறது…ஒரு சொல் பன்மொழி போலும் o.o.o காதலின்  இலக்கணத்தில் மட்டும்“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பதின்இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்நான் உன்னை காதலிக்கிறேன் என்பதே… o.o.o இதழும்இதழும் இதழோடு இதழானது…உம்மை தொகை கைப்பேசி முத்தம் பெயரெச்சம்கன்னத்தில் முத்தம் (...)'

Read full article

தங்க கூண்டு

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 07-04-2013 02:13:00

' கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்? காபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்அப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்போதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்தனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டுஅம்மா ஒன்றை படைத்துவிடு “நான் முதலில் உச்சரித்த கவிதை நீமண்ணில் வாழும் தெய்வம் நீ”என்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு … கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்? அம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்எவனோ சொன்னான்…யாருக்கு வேண்டும்(...)'

Read full article

க்ஆ-த்அ-ல் – 2

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 07-04-2013 02:09:00

' நீ நிலாநான் நிலா ரசிக்கும் பிள்ளைநான் உன்னை தான் காதலிக்கிறேன்நீ என்னை காதலிக்கவேண்டுமென்றெல்லாம் அவசியமில்லைo.o.oயாரென்று தினம் கேட்கிறாயேநீ தானென்று உனக்கு தெரியாதா?தாய் தந்தை யாரென்றெல்லாம்கேட்டா தெரிந்து கொண்டோம்…என் காதல் உனக்காக வாழும்இன்னொரு தாய் இன்னொரு தந்தைo.o.oநான் சொன்னால் கூடஆம், இல்லை இரண்டு பதில்கள்நீ சொல்லலாம் சொல்லாத வரைதினம் நீ எதற்கோ சொல்லும்“ஆம்” இதற்காகவென கேட்கிறதே அறிவியலே!இதயத்தில் காதுகள் இருக்கிறதுo.o.oமூன்று ஆங்கில வார்த்தை சொல்லிகையோட(...)'

Read full article

ரத்த மொழி

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 14-03-2013 13:44:00

'தினமும் கடக்கும் அந்தபிரதான சாலையின் தரையில்யாரோ ஒரு உடல்  தன் ரத்தம் கொண்டுஎதையோ எழுதி போவது உண்டு…அப்படி என்னதான் எழுதி போகிறார்கள் அவர்கள் தாங்கள் தலைகவசத்தைதலையில் மாட்டாமல்கையில் கொண்டுவந்த அவசியத்தையா? போன வாரம் நிச்சயமாகிவண்டி ஓட்டுகையில் கூடகைப்பேசியில் குடும்பம் நடத்தியவருங்கால மனைவிக்கு கொடுக்க மறந்த முத்தமா? விரட்டி வந்த பெண்ணிடம்சொல்ல மறந்த காதலா? என்ன தவறு நான் செய்தேன்?நீ செய்த நொடி பிழையில்என் வாழ்க்கை முடிவதேனோ என்றுகேட்க முடியாமல் போன ப(...)'

Read full article

Valentine இருதயம் – II

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 10-03-2013 04:00:00

'Image source Samantha Ruth Prabhu Official FB pageஎவன் சொன்னான்பூமிக்கு ஒரே நிலா என்று?நீ இருப்பதை தெரிந்துகொள்ளாதநாசாக்காரன் துரதிர்ஷ்டவசமான முட்டாள்o.o.oகாதல்உனக்கு தெரியாமல்உன் வீட்டில் நடமாடும் பூனை…களவாடும் உருட்டி விளையாடும் காயப்படுத்தும்.o.o.oகாதல்ஒரு காக்கா எச்சம்…தங்கத்தாலனது…உன் தலையில் விழுவதைதடுக்கவும் முடியாது…உன் தலையில்எப்போது விழ வேண்டுமென்பதைமுடிவெடுக்கவும் முடியாது….விழும் விழாமலும் போகும்…விழுந்தால் பத்திரப்படுத்திக்கொள்…விழவில்லையென தேடி திரியாதே…அது காக்கா எச்ச(...)'

Read full article

தேவதையின் சிறகு சுமை

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 09-03-2013 05:02:00

'கவிதை v 2012ஜனனம், பாசம், சகோதரத்துவம்,காதல், துணை, சந்ததிசுகக்கின்ற காயம், இனிக்கின்ற கண்ணீர்,சுவர்க்கமாய் மடி, சுகமாய் தோள்எத்தனை எத்தனை வரங்கள்இந்த தேவதை எனக்கு கொடுத்தது…அவளுக்கு  நம் சமுகம் கொடுத்ததென்னவோகள்ளிபால், அரைகுறை கல்வி,வரதட்சணை சுமை, அடுப்படி சிறை,தாலி என்னும் முள் வேலி,சீரியல் கண்ணீர், காமம்,  பயம் கற்பென்னும் சிலுவை,காபி கேட்டு அதட்டும் கணவன்,வேண்டுமென்றால் போட்டு குடிஎன்று சொல்ல முடியாத அளவு சுதந்திரம்என்கின்ற சாபங்கள் மட்டும் தான்…இந்த தேவ(...)'

Read full article

பிள்ளை கறி தின்னும் பூமி

Author : Ramanujam Solaimalai      Blog : சிதறல்கள்      Date : 04-03-2013 10:59:00

'அது பகிர்ந்துண்ணவிரும்பாத காக்கா கூட்டம்கண் அசந்தால்பிணமென்று சொல்லியே திண்று தீர்க்கும்ஆணையும் பெண்ணையும்... அப்படி என்ன பசியோ? பிள்ளை கறி தின்றது காக்கா ஒன்றுஇந்திய பெருங்கடலின்மயான தனிமையில்பிள்ளை கறி தின்றுவிட்டுதிருப்பதி கோபுரத்தில் வந்துஅழகின் அழுக்கை துடைத்து கொள்கிறது...வெங்கடாசலபதியோ சிரித்துகொண்டே பார்த்திருந்து கல்லென்று நிருப்பித்துவிட்டான்...அவன் என்ன செய்வான் பாவம் அவனுக்கு உண்டியல் துட்டை கணக்கு பார்க்கவே நேரம் சரியாய் இருக்கிறது பெரிய புராணத்தில் பிள்ளைக்கறி சிவன் கே(...)'

Read full article

Bloggers

active bloggers in the last 24 hrs. Number shown in the bracket represents number of posts published in past 24 hrs,


VASUKI MAHAL KALYANA MANDAPAM & VASUKI MAHAL MATRIMONIAL(3)

சி.பி.செந்தில்குமார்(3)

சீனி, சுப்பிரமணியன்(2)

Suresh Subramanian(2)

Bagawanjee KA(2)

mohamedali abdulkader(2)

Bala subramanian(1)

கோட்டகுப்பம்(1)

திண்டுக்கல் தனபாலன்(1)

Vathi kuchi(1)

kshetrayatraa(1)

Pas Pasupathy(1)

Sai Varadharajan(1)

mohamedali jinnah(1)

ranjani135(1)

சை. பைஜுர் ரஹ்மான்.(1)

அருணா செல்வம்(1)

Arul Selva Per arasan(1)

பார்வதி இராமச்சந்திரன்.(1)

வெங்கட் நாகராஜ்(1)

ASHROFF SHIHABDEEN(1)

Badri Seshadri(1)

பழமைபேசி(1)

Geneva Yuva Aagaaya Manithan(1)

pichaikaaran s(1)

வினையூக்கி(1)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து(1)

இராஜராஜேஸ்வரி(1)

aKuma(1)

பன்னிக்குட்டி ராம்சாமி(1)

கவிதை வீதி... // சௌந்தர் //(1)

Thenammai Lakshmanan(1)

கும்மாச்சி(1)

Loshan ARV(1)

IdlyVadai(1)

மோகன் குமார்(1)

Vel Tharma(1)

நண்டு @நொரண்டு -ஈரோடு(1)

ஸ்ரீராம்.(1)

Abilash Chandran(1)

Rathna Peters(1)

புதுகைத் தென்றல்(1)

SP.VR. SUBBAIYA(1)

கலையரசன்(1)

அருள்(1)

Avargal Unmaigal(1)

Prabhavathi(1)

banu venky(1)

உஜிலா தேவி(1)

தமிழ் மாறன்(1)

மதி (GS)(1)

Jackiesekar(1)


garland of Languages of India
an amalgamation of the diversified traditions
gracefully presented with novelty
http://www.haaram.com